செய்திகள்
மரணம்

ஆவடி அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2020-10-09 10:50 GMT   |   Update On 2020-10-09 10:50 GMT
ஆவடி அருகே மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:

ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் டில்லி (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பர் ஞானசேகர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை திருநின்றவூர் மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது டில்லி மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லி மேம்பாலத்தின் ஓரம் நடந்து சென்றார். இதில் அவர் திடீரென மேம்பாலத்தின் மேல் இருந்து தவறி 25 அடி ஆழத்தில் கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி டில்லி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News