செய்திகள்
பொள்ளாச்சி ஜெயராமன்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா

Published On 2020-09-27 07:38 GMT   |   Update On 2020-09-27 07:38 GMT
சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக செயற்குழு நாளை நடக்கும் நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான பொள்ளாச்சி ஜெயராமன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
Tags:    

Similar News