செய்திகள்
மின்னல்

தேனி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

Published On 2020-09-17 10:40 GMT   |   Update On 2020-09-17 10:40 GMT
தேனி அரப்படிதேவன்பட்டி பகுதியில் மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி:

தேனி அரப்படிதேவன்பட்டி பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். அவரை தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மின்னல் தாக்கி  2 பெண்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News