search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னல் தாக்கி பலி"

    • பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
    • இறந்தோர் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

    ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால், கிஷன்கஞ்ச், கைமூர், வைஷாலி, ஷிவன், பாட்னா, அராரியா, ஷரண் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர்.

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் சென்றது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மழையால் சேலம் 5 ரோடு, 4 ரோடு, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலத்தின் கீழ் இருசக்கர வாகன ஓட்டிகள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

    புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி நின்றதால், பஸ்கள் உள்ளே வர முடியாமலும் வெளியே செல்ல முடியாமலும் ஆங்காங்கே நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனம் நின்றன.

    பாதாள சாக்கடை பணி நடக்கும் இடங்களிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக நெத்திமேடு ஜெயராணி மேல்நிலைப்பள்ளி, பாரதி மருத்துவமனை அருகே, உச்சிபாளையம் கருவாட்டு பாலம் அருகே, மழை நீர் ஆறாக ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகங்களுக்கு சென்று வீடு திரும்புவோர் அவதிப்பட்டனர்.

    மேச்சேரியை சேர்ந்தவர் இளங்கோ மகன் அகிலன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை ஒட்டி, சேலம் கோட்டை அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை பாட்டி வேலைக்கு சென்ற நிலையில் அகிலன் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மழை பெய்ததால், வீட்டுக்கு திரும்பிய மாணவன், வீடு பூட்டி இருந்ததால் நனையாமல் இருக்க மாடிப்படியில் நின்றார்.

    அப்போது மின்னல் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, கரிய கோவில், காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. பனமரத்துப்பட்டியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. இந்த மரங்களை ஊழியர் அகற்றி பின், மின்வினியோகம் சீரானது.

    கெங்கவல்லி, ஆத்தூர், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மின்னலுடன் கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேல் பெய்த இந்த மழையில், அந்த பகுதிகளில் உள்ள 3 தென்னை மரங்கள் தீப்பிடித்து எறிந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மாநகரில் 31.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. தம்மம்பட்டி 25, கரியகோவில் 20, காடையாம்பட்டி 18, நங்கவல்லி 15, ஆத்தூர் 12, ஏற்காடு 7.2, எடப்பாடி 6.4, வீரகனூர் 6, ஓமலூர் 4, ஆனைமடுவு 3 என மாவட்டம் முழுவதும் 148 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேந்தமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சேந்தமங்கலம்-நாமக்கல் சாலையில் மரம் ஒன்று வேருடன் முறிந்து விழுந்தது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.

    அதேபோல எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என தெரிய வந்துள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

    மேலும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்றார்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இஸ்ரவேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வாலிபர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம், கஜுலரேகா பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது22).

    இவர் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    திடீரென சூறாவளி காற்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இஸ்ரவேல் மீது மின்னல் தாக்கியது. இதில் அவரது உடலில் மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த அகில், சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இஸ்ரவேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாளை சித்தூரில் நடைபெறும் போலீஸ் தேர்வில் இஸ்ரவேல் தயாராக இருந்தார்.

    இந்த நிலையில் அவர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பச்சை பயிறு மூட்டையின் மீது தார்பாய் போடுவதற்காக சென்றபோது மின்னல் தாக்கியது.
    • காயமடைந்த இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அவ்வகையில் இன்று மாலை பொன்னேரி சுற்று வட்டார பகுதியில் திடீரென இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    பொன்னேரி அடுத்த பெரும்பேடு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி சரவணன் (45), செங்கழுநீர் மேடு பகுதியை சேர்ந்த வேம்புலி (60), பெரும்பேடு பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி (40) ஆகியோர் வயலில் பச்சைப்பயிறு அறுவடை செய்து கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சரவணன் பச்சை பயிறு மூட்டையின் மீது தார்பாய் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஆதிலட்சுமி மயங்கி விழுந்தார். வேம்புலிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இருவரையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மின்னல் தாக்கி இறந்த சரவணன் என்பவருக்கு சரிதா என்ற மனைவியும் மஞ்சு(23), விக்னேஷ்(18) என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திடீரென மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்

    புதுக்கோட்டை:

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த அதீத கனமழையால் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • பீகாரில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம் தெரிவித்துள்ளது.

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    • கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் இறந்துவிட்டனர்.

    விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சாட்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பாண்டா, பதேபூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 14 பேர் இறந்து விட்டனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    பாண்டா மாவட்டத்தில் 4 பேர், பதேபூர் 2 பேர், பல்ராம்பூர், புலந்த்சாகர், ரே பரேலி, அமேதி, கவுஷாம்பி, சுல்தான்பூர் மற்றும் சித்ரகூட் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் பலியாகினர்.

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மோசமான வானிலை காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்
    • கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சம்பரான், ஆராரியா, போஜ்பூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கியதில் 16 பேர் இறந்து விட்டனர்.

    இதில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

    மேலும் மோசமான வானிலை காலங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×