search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மின்னல் தாக்கி பலி
    X

    கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மின்னல் தாக்கி பலி

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இஸ்ரவேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வாலிபர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம், கஜுலரேகா பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது22).

    இவர் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார்.

    திடீரென சூறாவளி காற்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

    கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த இஸ்ரவேல் மீது மின்னல் தாக்கியது. இதில் அவரது உடலில் மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த அகில், சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இஸ்ரவேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாளை சித்தூரில் நடைபெறும் போலீஸ் தேர்வில் இஸ்ரவேல் தயாராக இருந்தார்.

    இந்த நிலையில் அவர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×