செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-09-16 10:19 GMT   |   Update On 2020-09-16 10:19 GMT
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது.

இதன் காரணமாக திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News