செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு கிராம நிர்வாக அதிகாரி பலி

Published On 2020-09-10 10:19 GMT   |   Update On 2020-09-10 10:19 GMT
சீவலப்பேரி கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.
ஏர்வாடி:

திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த 47 வயதுடையவர் சீவலப்பேரி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அத்துடன் மூச்சு திணறலும் இருந்து வந்தது. இதனால் கொரோனா அறிகுறியுடன் அவர் கடந்த 7-ந் தேதி திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்தார்.

கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
Tags:    

Similar News