செய்திகள்
நகை பறிப்பு

சேலம் அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2020-09-06 09:00 GMT   |   Update On 2020-09-06 09:00 GMT
சேலம் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் அம்மாபேட்டை வரதய்யர் தெருவை சேர்ந்தவர் விமலா(வயது 62). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது உறவினர் ஒருவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென விமலா கழுத்தில் அணிந்திருந்த 1¼ பவுன் நகையை வேகமாக பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News