செய்திகள்
கமல்ஹாசன்

நம் அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது - கமல்ஹாசன் வேண்டுகோள்

Published On 2020-09-01 10:20 GMT   |   Update On 2020-09-01 10:20 GMT
வெளியே வரும் போது நமது அலட்சியம் மற்றவர்களுக்கு ஆபத்தாகி விடக்கூடாது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் பல தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே நமைக் காத்திடும்” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News