செய்திகள்
கீழ்வேளூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வான மதிவாணனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
நாகை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5958 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், நாகை மாவட்டம் கீழ்வேளுர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான மதிவாணனுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்திகேயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.