செய்திகள்
யானை

குற்றாலத்தில் யானை அட்டகாசம்

Published On 2020-08-12 09:04 GMT   |   Update On 2020-08-12 09:04 GMT
யானைகள் குற்றாலம் பகுதிக்கு வராதவகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தென்காசி:

குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் கரடி அருவி அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளன. இந்த பகுதியில் தென்னை, பாக்கு, மா போன்ற மரங்களும் தனியாரால் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் காட்டு யானைகள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து இங்கு உள்ள பயிர்களை சேதம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் ஒரு யானை வந்து இங்கு உள்ள ஒரு பாக்கு மரத்தை வேருடன் பிடுங்கி சாய்த்து அட்டகாசம் செய்து உள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இந்த யானைகள் தொடர்ந்து வந்தால் குற்றாலத்திற்கு செல்பவர்கள் மற்றும் அங்கு இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே யானைகள் குற்றாலம் பகுதிக்கு வராதவகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News