search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை அட்டகாசம்"

    • கிராம மக்கள் அச்சம்; விடிய விடிய ரோந்து
    • துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு வனப்ப குதியில் ஒற்றை யானை புகுந்தது.

    ஒடுகத்தூர் வனச்சர கத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு, கல்லாபாறை, குறவன் கொட்டாய், தென்புதூர், மேல்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்ச லுக்கு ஓட்டி சென்றனர்.

    அப்போது ஒற்றை கொம்பன் யானை சுற்றி திரிவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது.

    இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரின் ஆங்காங்கே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

    மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது விவசாய நிலங்களில் ஒற்றை கொம்பன் யானை சுற்றி வலம் வருவதால் நேற்று இரவு முதல் வனத்துறையினரின் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். யானையின் நடமாட்டத்தால் ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வயது முதிர்ந்து காணப்படும் இந்த யானையை யாரும் இடையூறு செய்யக்கூடாது. இது பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது.

    விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தினால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    ஜவ்வாது மலை தொடரை பூர்வீகமாக கொண்டு ஜமுனாமுத்தூர், ஆலங்காயம், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறது.

    அந்த யானையை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். வேட்டைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும் யானையே துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கிராம போக்குவரத்து துண்டிப்பு
    • தூரமாக நின்று சிலர் செல்பி எடுத்து கொண்டனர்

    ஆம்பூர்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன.

    அதில் 2 யானைகள் இறந்துவிட்டது. மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை யினர், முதுமலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

    இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது.

    பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவிக்காமல், ஒற்றை தந்தத்துடன் கம்பீரமாக சுற்றி வரும் இந்த யானைக்கு பொதுமக்கள் 'ஒற்றைக் கொம்பன்' என பெயர் சூட்டி செல்லமாக அழைக்கின்றனர்.

    இதற்கிடையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை கொம்பன் யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது.

    ஆம்பூர் அடுத்த நாயாக்கனேறி மலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி வனப்பகுதி சாலையில் இன்று காலை ஒற்றை யானை நின்று கொண்டு கொம்பன் யானை அட்டகாசம் செய்தது.

    அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை கடந்து செல்ல விடாமல் பார்வையால் மிரட்டியது.

    பல மணி நேரமாக சாலையிலேயே நின்று கொண்டிருந்ததால், அந்த வழியாக மலை வாழ் மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.

    நகராமல் சாலையில் நின்று கொண்டிருந்த யானையுடன், தூரமாக நின்று சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.

    இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்ட விலை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன.
    • வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் 3 காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய விளைநி லங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

    இது பற்றி வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்டினர். இதில் ஓரு யானை மட்டும் காட்டுக்குள் செல்லாமல் மீண்டும் வெளியே வந்தது. அந்த யானை சானமாவு வனப்பகுதியையொட்டி விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது.

    இதனால் வனத்து றையினர் இன்றுகாலை அந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டங்களில் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்தியது.
    • அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் ஊராட்சியில் கோபாலபுரம், இந்திராநகர் ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. இங்கு விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டுள்ளனர்.

    கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டங்களில் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயிகள் தீப்பந்தம் கொண்டு விரட்டினாலும், மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    இதையடுத்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் காட்டு யானை ஊருக்குள் புகாதவாறு விரட்டும் வகையில் வனத்தையொட்டிய பகுதியில் வன அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தென்னை மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது
    • யானை வருவதை எச்சரிக்கும் சைரனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்து கெம்பனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வருகின்றன.

    நேற்று இரவு அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கெம்பனூர் பகுதிக்குள் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானை தோட்டங்களில் பயிரிடப்பட்ட சோளம், தக்காளி செடிகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    பின்னர் அங்கிருந்து சென்ற யானை அருகே இருந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான தென்னை தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு இருந்த 7 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்து கொண்ட மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருந்து கொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அடிக்கடி யானை ஊருக்குள் வருகிறது. இதனால் அச்சமாக உள்ளது.

    யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க 2 வருடங்களுக்கு முன்பு வனத்துறை சார்பில் சைரன் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

    ேமலும் மருதமலை, ஓணாப்பாளையம், அட்டுக்கல் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வனத்துறைனர் நேர்ந்து பணியில் ஈடுபடுவதில்லை. எனவே யானையை கண்காணிக்க வனத்துறையினர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் யானை வருவதை எச்சரிக்கும் சைரனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
    • நோயாளிகளை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சை நடுவழியில் மறித்தது.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே உள்ள இரும்புபாலம், பாரைக்கல், ரிச்மென்ட் தேவகிரி நீர்மட்டம், மேஞ்கோரேஞ்ச் உள்பட பலபகுதிகளில் காட்டுயானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை மிதித்து நாசம் செய்து வருகிறது. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களையும் வழிமறித்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர்அரசுஆஸ்பத்திரி அருகே நோயாளிகளை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்சை நடுவழியில் மறித்தது. இதுபற்றி அறிந்ததும் தேவாலா வனசரகர் அய்யனார், வனவர் சிவகுமார், வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டைதடுப்புகாவலர்கள் அங்கு சென்று, காட்டுயானையை விரட்டி அடித்தனர். இதனால் ஆவேசமடைந்த காட்டுயானை இரும்புபாலம் பொதுமக்கள் குடியிருப்பை முற்றுகையிட்டது. இரும்புபாலம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். தேவாலா வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரிசி, காய்கறி வாகனங்களை வழிமறித்தது
    • மலை கிராம மாணவர்கள் பள்ளிக்கு வர அச்சம்

    ஆம்பூர்:

    ஆந்திர வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் சுற்றித்திரிகிறது.

    விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பல ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர் வகைகளை ஒற்றை யானை மிதித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் உள்ள மலைச்சாலையில் ஒற்றையானை மலைகிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    அங்குள்ள மலை பாதையில் நின்றுகொண்டு வாகனங்களை மறிக்கிறது. மோட்டார் சைக்கிள்களில் அரிசி, காய்கறி ஏற்றி செல்லும் போது வழிமறித்து அவற்றை சேதப்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து மலைப்பாதையில் ஒற்றையானை நின்று கொண்டிருப்பதால் மலைகிராம மக்கள் கீழே இறங்காமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    இன்று காலையிலும் நாயக்கனேரி மலைப்பாதையில் நடுரோட்டில் நின்று வாகனங்களுக்கு வழிவிடாமல் யானை நின்று கொண்டிருந்தது.

    இதைக் கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டபடி யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

    தொடர்ந்து மலைப் பாதையை ஒட்டியே ஒற்றையானை இருப்பதால் மலை கிராமங்களில் இருந்து ஆம்பூருக்கு வரும் பள்ளி மாணவர்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.

    சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

    ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×