என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை அருகே கிராமத்திற்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
BySuresh K Jangir26 Jan 2023 5:56 AM GMT
- கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டங்களில் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்தியது.
- அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் ஊராட்சியில் கோபாலபுரம், இந்திராநகர் ஆகிய கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன. இங்கு விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டங்களில் புகுந்து நெல், வாழை பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயிகள் தீப்பந்தம் கொண்டு விரட்டினாலும், மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இதையடுத்து அமராவதி வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வன ஊழியர்கள் ஒற்றை யானையை வனத்துக்குள் விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் காட்டு யானை ஊருக்குள் புகாதவாறு விரட்டும் வகையில் வனத்தையொட்டிய பகுதியில் வன அதிகாரிகள், ஊழியர்கள் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X