என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The elephant is fierce"
- கிராம மக்கள் அச்சம்; விடிய விடிய ரோந்து
- துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள ஆசனாம்பட்டு வனப்ப குதியில் ஒற்றை யானை புகுந்தது.
ஒடுகத்தூர் வனச்சர கத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு, கல்லாபாறை, குறவன் கொட்டாய், தென்புதூர், மேல்பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று வனப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேய்ச்ச லுக்கு ஓட்டி சென்றனர்.
அப்போது ஒற்றை கொம்பன் யானை சுற்றி திரிவதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரின் ஆங்காங்கே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது விவசாய நிலங்களில் ஒற்றை கொம்பன் யானை சுற்றி வலம் வருவதால் நேற்று இரவு முதல் வனத்துறையினரின் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். யானையின் நடமாட்டத்தால் ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வயது முதிர்ந்து காணப்படும் இந்த யானையை யாரும் இடையூறு செய்யக்கூடாது. இது பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது.
விவசாய நிலங்களை யானை சேதப்படுத்தினால் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
ஜவ்வாது மலை தொடரை பூர்வீகமாக கொண்டு ஜமுனாமுத்தூர், ஆலங்காயம், ஒடுகத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறது.
அந்த யானையை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும். வேட்டைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரேனும் யானையே துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கிராம போக்குவரத்து துண்டிப்பு
- தூரமாக நின்று சிலர் செல்பி எடுத்து கொண்டனர்
ஆம்பூர்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன.
அதில் 2 யானைகள் இறந்துவிட்டது. மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப் பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்தது. அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை யினர், முதுமலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது.
பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவிக்காமல், ஒற்றை தந்தத்துடன் கம்பீரமாக சுற்றி வரும் இந்த யானைக்கு பொதுமக்கள் 'ஒற்றைக் கொம்பன்' என பெயர் சூட்டி செல்லமாக அழைக்கின்றனர்.
இதற்கிடையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை கொம்பன் யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது.
ஆம்பூர் அடுத்த நாயாக்கனேறி மலை ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி வனப்பகுதி சாலையில் இன்று காலை ஒற்றை யானை நின்று கொண்டு கொம்பன் யானை அட்டகாசம் செய்தது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை கடந்து செல்ல விடாமல் பார்வையால் மிரட்டியது.
பல மணி நேரமாக சாலையிலேயே நின்று கொண்டிருந்ததால், அந்த வழியாக மலை வாழ் மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது.
நகராமல் சாலையில் நின்று கொண்டிருந்த யானையுடன், தூரமாக நின்று சிலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
யானையின் நடமாட்டத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளது. இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இதனை வனத்துறையினர் பிடித்து, அதற்கு தேவையான உணவு உள்ளிட்ட விலை வழங்கி பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்