செய்திகள்
வலங்கைமான் அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வலங்கைமான்:
வலங்கைமான் தாசில்தார் கண்ணன், பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது இரு சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். கடந்த ஒரு வாரமாக நடந்த கண்காணிப்பு பணியின்போது 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.