செய்திகள்
திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்செங்கோட்டில் திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கரபாண்டியன். இவருக்கும் மும்பையை சேர்ந்த நளினி பிரான்சிஸ் (வயது 26) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இருவரும் கரட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நளினி பிரான்சிஸ் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் வளைகாப்பு நடத்துவதற்காக நல்ல நாள் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய அவரின் தாயார் லதா பிரான்சிஸ் தமிழ்நாடு வந்தார். பின்னர் அவர் பெரம்பலூரில் உள்ள தனது மூத்த மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நளினி பிரான்சிஸ் கரட்டுப்பாளையம் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கர்ப்பிணியின் தாய் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் அதற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுகுறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜூம் விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கரபாண்டியன். இவருக்கும் மும்பையை சேர்ந்த நளினி பிரான்சிஸ் (வயது 26) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இருவரும் கரட்டுப்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நளினி பிரான்சிஸ் 6 மாத கர்ப்பிணியாக இருந்ததால் வளைகாப்பு நடத்துவதற்காக நல்ல நாள் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய அவரின் தாயார் லதா பிரான்சிஸ் தமிழ்நாடு வந்தார். பின்னர் அவர் பெரம்பலூரில் உள்ள தனது மூத்த மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நளினி பிரான்சிஸ் கரட்டுப்பாளையம் வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு டாக்டர் பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கர்ப்பிணியின் தாய் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் அதற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இதுகுறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜூம் விசாரணை நடத்தி வருகிறார்.