செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணி குறித்து மதுரை, நெல்லை, தென்காசியில் முதல்வர் பழனிசாமி 6ம் தேதி முதல் ஆய்வு

Published On 2020-08-03 06:02 GMT   |   Update On 2020-08-03 06:05 GMT
கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் ஆய்வு செய்கிறார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் நேரில் ஆய்வு செய்கிறார்.

அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குகிறார்.
Tags:    

Similar News