செய்திகள்
மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது.
சென்னை:
திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 30ந்தேதி மாலை காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளிவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இக்கூட்டத்தில் கருணாநிதி நினைவு தினம், கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 30ந்தேதி மாலை காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளிவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.
கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இக்கூட்டத்தில் கருணாநிதி நினைவு தினம், கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.