செய்திகள்
விபத்து பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவன் பலி

Published On 2020-07-23 12:46 GMT   |   Update On 2020-07-23 12:46 GMT
செங்கோட்டை அருகே விபத்தில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு அருகில் இருக்கும் அங்கன்காலடி ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் சதீஷ் (வயது 18). இவர் தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து புளியரை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். தாட்கோநகர் குரங்குநடை மெயின் ரோட்டில் வந்தபோது ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ், ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அரிகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News