செய்திகள்
கஞ்சா பறிமுதல்

லாரியில் கடத்திய 105 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2020-07-19 11:08 GMT   |   Update On 2020-07-19 11:08 GMT
ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தப்பட்ட 105 கிலோ கஞ்சாவை மாதவரத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:

ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ கஞ்சாவை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவரத்தில் பறிமுதல் செய்தனர்.

ரூ.25 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை கடத்திய பிரின்ஸ், ஜோஸ்வா, கார்த்தி, வசந்தகுமார், தமிழரசன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News