செய்திகள்
பெண் கடத்தல்

திருக்கோவிலூர் அருகே இளம்பெண் கடத்தல்- போலீசார் விசாரணை

Published On 2020-07-17 10:26 GMT   |   Update On 2020-07-17 10:26 GMT
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே ஜி.அரியூர் கிராம பகுதியை சேர்ந்தவர் 19 வயதுடைய இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டு அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வீட்டுக்கு செல்லவில்லை. அவரை விழுப்புரம் மாவட்டம் மேட்டுவலையனூரை சேர்ந்த சிவா (வயது 22) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சிவா மீது திருக்கோவிலூர்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகிறார்.
Tags:    

Similar News