செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக தலைவர் ஸ்டாலின்

அமைச்சர் செல்லூர் ராஜூவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

Published On 2020-07-10 09:07 GMT   |   Update On 2020-07-10 09:07 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
சென்னை:

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவரது மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்! எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News