செய்திகள்
பெண் தற்கொலை

வந்தவாசி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை

Published On 2020-07-04 10:40 GMT   |   Update On 2020-07-04 10:40 GMT
வந்தவாசி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செய்யாறு உதவி கலெக்டர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
வந்தவாசி:

வந்தவாசி தாலுகா கீழ்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), பெயிண்டர். இவருடைய மனைவி சங்கீதா (20). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. சங்கீதா கர்ப்பமாக இருந்தார்.

இதனையடுத்து அவர் வந்தவாசியை அடுத்துள்ள கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சங்கீதா விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சங்கீதாவின் தந்தை பிச்சாண்டி தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் விமலா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News