செய்திகள்
விபத்து

மணப்பாறை அருகே கார் மோதி ஒருவர் பலி - 4 பேர் காயம்

Published On 2020-07-04 10:19 GMT   |   Update On 2020-07-04 10:19 GMT
மணப்பாறை அருகே கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். மேலும், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
வையம்பட்டி:

மணப்பாறை அருகே உள்ள புதுமணியாரம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 55). இவரது உறவினர் கோபிக்கண்ணன்(30). இருவரும் நேற்று மணப்பாறையிலிருந்து புதுமணியாரம்பட்டிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கருங்குளம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் திருவள்ளூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியதுடன், எதிர் சாலைக்கு சென்று கவிழ்ந்தது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களில் வெள்ளைச்சாமி மணப்பாறை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காயமடைந்த கோபிக்கண்ணன் மற்றும் காரில் வந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டார போக்குவரத்து, மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் உள்பட 4 பேர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News