செய்திகள்
கோவில் உண்டியலில் பணம் கொள்ளை

அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணம் திருட்டு

Published On 2020-07-04 06:45 GMT   |   Update On 2020-07-04 06:45 GMT
ஓசூர் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் கிராமத்தில் பழமையான பட்டாளம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அம்மன் கழுத்தில் அணிவித்திருந்த 4 கிராம் மதிப்பிலான 4 தாலிப்பொட்டுகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றனர்.

நேற்று காலை அந்த வழியாக சென்ற சிலர், கோவில் கதவின் பூட்டு மற்றும் உள்ளே உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதேபோல் ராஜேஸ்வரி லேஅவுட் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் மர்ம ஆசாமிகள் திருட முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த கோவிலில் எதுவும் திருட்டு போகவில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சிப்காட் போலீசார் விசாரித்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News