செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே டெம்போ மோதி போலீஸ்காரரின் 2 வயது குழந்தை உயிரிழப்பு
அஞ்சுகிராமம் அருகே டெம்போ மோதி போலீஸ்காரரின் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
அஞ்சுகிராமம்:
நாகர்கோவில் அருகே உள்ள கீழப்புத்தளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி பாமா. இவர்களுக்கு ஒரு மகளும், தங்கரித்திக் (வயது 2) என்ற மகன். இந்தநிலையில் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் பாமா வந்தார்.
நேற்று காலை தங்கரித்திக் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ தங்கரித்திக் மீது மோதியது. இதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனே குழந்தையை மீட்டு, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, தங்கரித்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்ததும், பாமா கதறி அழுதார். இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் அருகே உள்ள கீழப்புத்தளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி பாமா. இவர்களுக்கு ஒரு மகளும், தங்கரித்திக் (வயது 2) என்ற மகன். இந்தநிலையில் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாட்டில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் பாமா வந்தார்.
நேற்று காலை தங்கரித்திக் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ தங்கரித்திக் மீது மோதியது. இதில் குழந்தை தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனே குழந்தையை மீட்டு, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, தங்கரித்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்ததும், பாமா கதறி அழுதார். இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.