செய்திகள்
தற்கொலை

எடப்பாடியில் பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2020-06-25 14:17 GMT   |   Update On 2020-06-25 14:17 GMT
எடப்பாடியில் வீட்டில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:

எடப்பாடியை அடுத்த சக்திநகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் திருமுருகன் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் கோபியை சேர்ந்த தங்கராஜ் மகள் லதாமணி (20) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு 8 மாதத்தில் இனியாஸ்ரீ என்ற பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று திருமுருகன் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டிலிருந்த லதாமணி வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து லதாமணியின் தந்தை தங்கராஜ் எடப்பாடி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News