செய்திகள்
தஞ்சை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளப்பெரம்பூர்:
தஞ்சை அருகே உள்ள மனையேரிப்பட்டி ஒத்ததெருவை சேர்ந்த ராமையா மகள் புனிதவள்ளி(வயது 18). பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு உணவில் எலி மருந்தை(விஷம்) கலந்து தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய தாய் கொடுத்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த புனிதவள்ளி மன வேதனையில் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.