செய்திகள்
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன்

ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

Published On 2020-06-10 02:06 GMT   |   Update On 2020-06-10 02:06 GMT
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான உடனே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரித்தார்.
Tags:    

Similar News