செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 3 பவுன் செயின்- செல்போன் பறிப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 3 பவுன் செயின்- செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை வளர்நகரைச் சேர்ந்த முருகதாஸ் மனைவி நதியா (வயது 34). இவர் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நதியா நேற்று மாலை பணிமுடிந்து மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஓடைப்பட்டி அருகே, பைக்கில் வந்த 3 பேர் கும்பல் கத்தி முனையில் வழிமறித்தது.
இதனால் மொபட்டை நிறுத்திய நதியாவிடம் அந்த கும்பல் 3 பவுன் தாலிச் செயின் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டது.
இது தொடர்பாக நதியா கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் செல்போன் மற்றும் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.