செய்திகள்
திருமங்கலம் முகாமில் தங்கியிருந்த வாலிபருக்கு கொரோனா அறிகுறி
திருமங்கலம் முகாமில் தங்கியிருந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருமங்கலம்:
மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்த மதுரையின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கி உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த முகாமில் தங்கிய 2 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மற்றவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூரைச் சேர்ந்த வாலிபருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.
இதனை அடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுவரை இந்த முகாமில் தங்கிய மகாராஷ்டிராவில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அங்கு இருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்த மதுரையின் பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கி உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த முகாமில் தங்கிய 2 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மற்றவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூரைச் சேர்ந்த வாலிபருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது.
இதனை அடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுவரை இந்த முகாமில் தங்கிய மகாராஷ்டிராவில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அங்கு இருப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.