செய்திகள்
கொடைக்கானலில் வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த பெண்
கொடைக்கானலில் வீட்டில் உடல் கருகிய நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரீனா பேகம் (வயது 40). இவர் தனது மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் அவருடைய வீட்டில் இருந்து தீப்பிடித்து புகை வந்தது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ஜெரீனா பேகம் உடல் முழுவதும் தீப்பிடித்து கருகிய நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.