செய்திகள்
ஓசூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் செல்போன் கடைக்காரர் தற்கொலை
ஓசூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் செல்போன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் பாகலூர் சாலை என்.ஜி.ஓஸ். காலனியை சேர்ந்தவர் ஜியாவுல்லா (வயது 47). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை வைத்து இருந்தார். இவரது மனைவி கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் சோகத்தில் இருந்த ஜியாவுல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.