செய்திகள்
வாகனங்கள் பறிமுதல் - கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 383 பேர் கைது - 305 வாகனங்கள் பறிமுதல்

Published On 2020-04-27 13:20 GMT   |   Update On 2020-04-27 13:20 GMT
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று மொத்தம் 383 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 305 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இருப்பினும் நேற்று காலை தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி திருப்பூர் மாநகரில் நேற்று இரவு 7 மணி வரை 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 104 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் திருப்பூர் புறநகரில் போலீசார் நேற்று இரவு 7 மணி வரை 260 வழக்குகள் பதிவு செய்து 260 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று மொத்தம் 383 பேர் கைது செய்யப்பட்டனர்.305 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News