திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்
திருவெறும்பூர்:
திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாற்று திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மருத்துவ துறைக்கு சவாலாக இருக்கும் கொரோனா வைரஸ் தொற் றுதல் பரவுதலை தடுக்க ஊர டங்கு அமுலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலனோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்நிலையில் அரசு சார்பிலும், தன்னார்வல அமைப்புகள் சார்பிலும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சியினரும் தங்களது பங்களிப்பாக களம் இறங்கி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவெ றும்பூர் அருகில் உள்ள சோழ மாதேவிபுரத்தில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ரத்தினவேல் அறிவுறுத்தலின்படி, நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வருவாய்த்துறையினர் முன்னிலையில் ஒன்றிய செயலாளர் எஸ். எஸ்.ராவணன் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இதனை மாற்று திறனாளிகள் சமூக விலகலை கடைபிடித்து பெற்றுகொண்டனர்.