செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்வு

Published On 2020-04-04 07:39 GMT   |   Update On 2020-04-04 07:44 GMT
விழுப்புரத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்:

டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர். வ.பகண்டை கூட்டு ரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News