செய்திகள்
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ. 4 000 கோடி தேவை- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியாக ரூ. 4 000 கோடி ஒதுக்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ. 500 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும். கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி தைரியமாக எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் என தெரிவித்திருந்தார்.