செய்திகள்
தற்கொலை

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் வாலிபர் தற்கொலை

Published On 2020-03-20 10:46 GMT   |   Update On 2020-03-20 10:46 GMT
சூலூர் அருகே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 24). இவர் திருமண செலவுகளுக்காக லோன் வாங்கி இருந்தார். ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த பாலமுருகன் சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை பி.ஏ.பி. வாய்க்காலுக்கு வந்தார். பின்னர் அந்த வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கோவை உக்கடம் வைரம் நகரை சேர்ந்தவர் சமீல் அமது(35). இவர் வியாபாரம் செய்வதற்காக கடன் வாங்கி இருந்தார். வியாபரத்தில் போதிய வருமானம் இல்லாததால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News