search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் பிரச்சினை"

    • சீர்காழி போலீசார் விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
    • விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

    இது குறித்த சீர்காழி போலீசார் விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த முருகன்(50) என்பதும், கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார். அவரை கொலை செய்தது யார் என்று சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்ததையடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் ஒரு நபர் இருசக்கரவாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக காவல்நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் மர்மநபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் நாங்கூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 26) என்பது தெரியவந்தது.

    மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த போலீசார்

    தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    முருகனிடம் ரூ.5ஆயிரம் ராஜகோபால் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை கேட்டுவந்த நிலையில் சம்பவத்தன்று முருகனை ராஜகோபால் சீர்காழி வரவழைத்து இரவு நேரத்தில் சாலையோரம் படுத்துறங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

    • விருதுநகர் அருகே கடன் பிரச்சினையில் ெதாழிலாளிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள புல்வாய்கரை அய்யனார்புரத்தை சேர்ந்தவர்் முருகன்(வயது55). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(21) என்பவருக்கு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முருகன் நரிக்குடி-திருப்புவனம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நாகராஜ் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். படு காயமடைந்த முருகன் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.
    • மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் வேணுகோபால்.இவரது மகன் மாரிமுத்து (வயது32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் அ.தி.மு.க. தொண்டாமுத்தூர் பேரூராட்சி 14-வது வார்டு துணை செயலாளராக இருந்துள்ளார். தற்போது தொண்டாமுத்தூர் பேரூராட்சி தொழில்நுட்ப பிரிவில் பொறுப்பாளராக பதவி வகித்து வந்தார். இதுதவிர இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இ-சேவை மையமும் நடத்தி வந்தார்.

    32 வயதை கடந்து தனக்கு இன்னும் திருமணம் ஆகாததால் மாரிமுத்து மன வேதனை அடைந்தார். இதனால் கடந்த சில நாட்களாக இதுகுறித்து தனது தாய், தந்தையிடம் புலம்பியுள்ளார்.

    அவர்கள் மாரிமுத்துவுக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றி வந்தனர். இருந்த போதிலும் அவர் மனவருத்தத்துடனேயே காணப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் தந்தையும், தாயும், அவர்களது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டனர்.

    இதனால் மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று வழக்கம் போல இ-சேவை மையத்திற்கு மாரிமுத்து சென்று பணியாற்றினர்.

    அங்கிருந்து மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். அப்போது வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்த மாரிமுத்துவின் தாய், தந்தையினர் மாலையில் வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியான அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது மகன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

    இதனை பார்த்ததும் அவர்கள் கதறி அழுதனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். வீட்டில் அவர் இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளரா என வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள அறையில் மாரிமுத்து தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் தொந்தரவும் செய்ய வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

    அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இவருக்கு அதிகளவில் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற முயற்சித்ததாகவும், ஆனால் கடன் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதனால் அவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாருமதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே பலியாகி விட்டது.
    • கங்காதரனுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்?யார்? அவரை யாரேனும் மிரட்டினார்களா என்ற விபரத்தை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    போரூர்:

    சாலிகிராமம், திலகர் தெருவில் வசித்து வந்தவர் கங்காதரன். சித்த மருத்துவர். இவரது மனைவி சாருமதி (வயது57). நெடுஞ்சாலைத் துறையில் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் ஜனபிரியா.

    கங்காதரன் கடந்த சில மாதங்களாகவே கடன் பிரச்சினையால் தவித்து வந்ததாக தெரிகிறது மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த கங்காதரன் கடந்த 11-ந்தேதி நள்ளிரவு உறவினர் ஒருவருக்கு தற்கொலை செய்யப் போவதாக செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    பின்னர் கங்காதரன் அவரது மனைவி சாருமதி மகள் ஜனபிரியா ஆகிய 3 பேரும் அளவுக்கு அதிகமாக விஷ மாத்திரைகளை சாப்பிட்டனர். இதில் கங்காதரன் அவரது மகள் ஜனபிரியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சாருமதியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சாருமதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். கடன் பிரச்சினையால் சித்த மருத்துவர் குடும்பமே பலியாகி விட்டது.

    கங்காதரனுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்?யார்? அவரை யாரேனும் மிரட்டினார்களா? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே கணவன்-மனைவி தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 45) டேங்கர் லாரி டிரைவர் .இவரது மனைவி தீபா (39) இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், ராகவி என்ற மகளும் உள்ளனர்.

    ராகவிக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடைபெற்றது. கவுதமன் சென்னையில் கேட்டரிங் படித்து வருகிறார். வீட்டில் திருப்பதியும், தீபாவும் மட்டும் வசித்து வந்தனர். திருப்பதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தற்கொலை

    இந்த நிலையில் நேற்று திருப்பதியும், தீபாவும் வசித்த வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டு அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி பொதுமக்கள் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின்விசிறியில் திருப்பதியும், தீபாவும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக தொங்கியது தெரியவந்தது.

    கடன் பிரச்சினை

    அவர்கள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்ய என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தங்களது மகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை உரிய நேரத்தில் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் திருப்பதி மற்றும் தீபாவின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வாணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40), தையல் தொழிலாளி. இவருக்கு செந்தாமரை(35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். செந்தாமரை அந்த பகுதியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடன் பிரச்சினையில் சிக்கிய நாகராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து பகண்டை கூட்டுரோடு போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • திருநாவலூர் அருகே விவசாயி கடன் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சிலாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32) இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்,ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை போக்க விஜயகுமார் கடன் வாங்கினார். மேலும் கடந்த தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்றார். சுயேட்சையாக நின்ற போதும் இவருக்கு கடன் ஏற்பட்டது. விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் சுயேட்சை தேர்தலில் நின்றதற்கு செலவழிக்க பணத்திற்காக இவர் பல நபர்களிடம் கடன் வாங்கி உள்ளார். . இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து கடனை திரும்ப கேட்டுள்ளனர்.

    கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் தகாத வார்த்தைகளால் விஜயகுமாரை திட்டி உள்ளனர். இதனால் நேற்று விஜயகுமாரின் மனைவி இவருடன் சண்டை போட்டு விட்டு திருநாவலூர் காமராஜர் நகரில் உள்ள அ வரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். விஜயகுமார் சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை கூப்பிட மாமியார் வீட்டிற்கு சென்றார் அதற்கு அவரது மனைவி வர மறுத்து விட்டார். கடன் பிரச்சினை யால் தவித்து வந்த விஜயகுமார் மனை வியுடனும் தகராறு ஏற்பட்டதனால் மன உளைச்சலில் இருந்தார். மேலும் மனைவியும் வர மறுத்து விட்டதால் உடனே மாமியார் வீட்டின் பின்பக்கம் சென்று வீட்டு தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த மனைவி மற்றும் அக்கம்பக்கம் உள்ளவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்கு திருநாவலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினையால் விவசாயி பூச்சி மருந்து சாப்பிட்டு உயிரை விட்ட சோகம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    வளவனூர் அருகே ரூ.500 கொடுத்த கடனை திருப்பி கேட்ட வாலிபர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    வளவனூர் அருகே கல்லிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ், (வயது 23) இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த சேதுராமன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.500 கடன் வாங்கினார். இந்த பணத்தை சந்திரபோஸ் கேட்டார். இதனால் சேதுராமனோடு வாய் தகராறு ஏற்பட்டது.

    இதைபார்த்த சேதுராமன் உறவினர்கள் கலியமூர்த்தி, வனிதா, ஜெயமணி, விஜயசாந்தி ஆகியோர் சந்திரபோசை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கலியமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    ×