செய்திகள்
கொள்ளை

திண்டுக்கல் அருகே வீடு புகுந்து நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2020-03-19 16:14 GMT   |   Update On 2020-03-19 16:14 GMT
திண்டுக்கல் அருகே வீடுபுகுந்து 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே சாணார்பட்டி ஒன்றியம் வி.டி.பட்டி வடக்காம் பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது60). இவர் மேட்டுப்பட்டியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவரது மகன் யுவராஜ் எலக்ட்ரிசனாக வேலை பார்த்து வருகிறார்.

வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர். பெரியசாமியின் மனைவி அமிர்தவள்ளி, மருமகள் சுப்புலட்சுமி ஆகியோர் 100 நாள் வேலைக்கு சென்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 11 பவுன் தங்கநகையை கொள்ளையடித்து சென்றனர். வேலை முடிந்து வீடு திரும்பிய பெரியசாமி பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை கொள்ளைபோனது தெரியவந்தது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ரூரல் டி.எஸ்.பி வினோத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வாசு மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் டி.எஸ்.பி சீனியம்மாள் சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தார். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. மேலும் போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News