செய்திகள்
மதுரையில் வாலிபர் கொலை- பழனி நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
மதுரை வாலிபர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் பழனி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பழனி:
மதுரை அவனியாபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 30 வயதுடைய வாலிபர் தலையில்லாமல் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது35) என தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சூர்யா, ரஞ்சித்குமார் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் ரஞ்சித்குமார் என்பவர் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் ரகுபதிராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை அவனியாபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 30 வயதுடைய வாலிபர் தலையில்லாமல் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது35) என தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சூர்யா, ரஞ்சித்குமார் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் ரஞ்சித்குமார் என்பவர் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் ரகுபதிராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.