search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் சரண்"

    • தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
    • கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் நாயகர் மாவட்டம் பிடாபாஜூ கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன்பாக். கூலி தொழிலாளி. இவரது மனைவி தரித்ரி (வயது30).

    இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் அர்ஜூன் பாக் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார். தான் வேலைக்கு சென்ற நேரங்களில் மனைவி வேறு வாலிபரை அழைத்து உல்லாசமாக இருந்ததாக கருதினார்.

    இதுபற்றி மனைவிடம் கேட்டார். அதற்கு தரித்ரி மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இந்த பிரச்சனை தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அர்ஜூன்பாக் கோடரியால் தரித்ரியின் தலையை துண்டித்து கொன்றார். பின்னர் தலையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பானிகோச்சா போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு நடந்த விவரத்தை கூறி சரணடைந்தார். போலீசார் அந்த பையை கைப்பற்றி அர்ஜூனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து கொலை நடந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தலை இல்லாத தரித்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கள்ளக் காதல் தகராறில் பிரசன்னா கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூரில் பிரசன்னா என்ற வாலிபர் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். கடந்த 24-ந் தேதி நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக் காதல் தகராறில் பிரசன்னா கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த டொமினிக் என்பவர் தனது ஆட்களை திரட்டி பிரசன்னாவை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக சீனிவாசன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். சாந்தோம் டிமாண்டி காலனியை சேர்ந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தரமணியை சேர்ந்த முருகேசன் என்ற வாலிபர் மயிலாப்பூர் துணை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×