செய்திகள்
கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார் - சுகாதாரத்துறை அமைச்சர் டுவிட்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
காஞ்சிபுரம் என்ஜினீயர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் வந்த உறவினர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் 27 பேருக்கு ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.