செய்திகள்
திசையன்விளை அருகே தொழிலாளி தற்கொலை
திசையன்விளை அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள மடத்தச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது46), கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதை அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரன் வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சந்திரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திசையன்விளை அருகே உள்ள மடத்தச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது46), கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதை அவரது மனைவி ஜெயா கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சந்திரன் வீட்டில் உள்ள கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சந்திரனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.