செய்திகள்
மாயம்

இரணியல் அருகே காப்பகத்தில் தங்கி இருந்த பெண் மாயம்

Published On 2020-03-04 15:06 GMT   |   Update On 2020-03-04 17:07 GMT
இரணியல் அருகே காப்பகத்தில் தங்கி இருந்த பெண் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரணியல்:

இரணியல் அருகே தோட்டியோட்டில் அரசு பெண்கள் பாதுகாப்பு விடுதி உள்ளது. குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகும் வழக்குகளில் தொடர்புடைய பெண்கள் இந்த விடுதியில் தங்கவைக்கப்படுவது வழக்கம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் தொடர்புடைய சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 23) என்ற இளம்பெண் இந்த விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

நேற்று மாலை விடுதியின் பின்புறம் சென்ற ஈஸ்வரி திடீரென்று மாயமாகி விட்டார். இதுபற்றி விடுதி கண்காணிப்பாளர் அனுஷா இரணியல் போலீசில் புகார் செய்தார். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News