செய்திகள்
கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் திருட்டு
கன்னியாகுமரியில் முகவரி கேட்பது போல் நடித்து ஆட்டோ டிரைவரிடம் 2 பேர் செல்போனை பறித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாலசுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 37). ஆட்டோ டிரைவர்.
இவர் சம்பவத்தன்று பயணிகளை ஏற்றுவதற்காக சிலுவை நகர் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் அருணிடம் முகவரி கேட்பது போல் அவர் வைத்திருந்த செல்போனை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.