செய்திகள்
கைது

கோவையில் நர்சை தாக்கிய கணவர் கைது

Published On 2020-02-28 10:35 GMT   |   Update On 2020-02-28 10:35 GMT
கோவையில் வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பை குறித்து கேட்ட நர்சை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கோவை:

கோவை விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் பிரேம்குமார். பெயிண்டர். இவரது மனைவி பஞ்சவர்ணம்(33).இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பிரேம்குமாருக்கு ஆவாரம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரேம்குமார் அடிக்கடி அங்கு சென்று வந்தார். மேலும் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த பிரேம்குமாரிடம், பஞ்சவர்ணம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் மனைவியை பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பஞ்சவர்ணம் சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேலு. கேபிள் ஆபரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று தங்கவேலு கண்ணம் பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் திடீர் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த பீர்பாட்டிலை எடுத்து தங்கவேலுவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கவேலு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கேபிள் ஆபரேட்டரை தாக்கியதாக ராமையா கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த டிரைவரான தீபக்(19) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News