செய்திகள்
மதுரையில் வீடு புகுந்து 16 பவுன் நகை-பணம் கொள்ளை
மதுரையில் வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அண்ணா நகர், சதாசிவம் நகரில் உள்ள புகழேந்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் அமாவாசையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
சாமி கும்பிட்டு விட்டு மறுநாள் காலை வீடு திரும்பிய கார்த்திகேயன், கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை-பணம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை ஆண்டாள் புரத்தில் முகமதுரபிக் (38) என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடைக்குள் புகுந்து ரூ. 7500-ஐ திருடினர். போலீசார் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும், அதன் பதிவு எந்திரத்தையும் திருடிச்சென்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை அண்ணா நகர், சதாசிவம் நகரில் உள்ள புகழேந்தி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவர் அமாவாசையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
சாமி கும்பிட்டு விட்டு மறுநாள் காலை வீடு திரும்பிய கார்த்திகேயன், கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது நகை-பணம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
மதுரை ஆண்டாள் புரத்தில் முகமதுரபிக் (38) என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது கடைக்குள் புகுந்து ரூ. 7500-ஐ திருடினர். போலீசார் அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும், அதன் பதிவு எந்திரத்தையும் திருடிச்சென்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.