செய்திகள்
தற்கொலை

காரிமங்கலம் அருகே விவசாயி தற்கொலை

Published On 2020-02-24 13:12 GMT   |   Update On 2020-02-24 13:12 GMT
காரிமங்கலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள காமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது50). விவசாயி. மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்த இவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நேற்று காலை அங்கு விவசாய கிணற்றின் அருகே அருணாசலம் கட்டிலில் இறந்தவாறு கிடந்தார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

அப்போது அருணாசலம் குடித்த மதுவில் விஷம் கலந்து இருந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அருணாசலம் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News