செய்திகள்
விபத்து பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2020-02-24 06:25 GMT   |   Update On 2020-02-24 06:25 GMT
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (48) விவசாய கூலி தொழிலாளி.

இவர் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு பெரம்பூருக்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஊத்துக்கோட்டையிலிருந்து பெரியபாளையம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

இதில் ராமமூர்த்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஊத்துக்கோட்டையை சேர்ந்த அய்யப்பன் (35), பின்னால் அமர்ந்து வந்த முரளி (60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்துவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்கைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி பலியானார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News